Monday, July 26, 2010

பழசுகள் பறஞ்ச பழைய கதைகள்.


ஊரிலை இருக்கேக்க எனக்கு பெடி பெட்டையளுடன் சினேகிதம் இருந்ததை விட கனக்க சீனியர் சிட்டிசன்மாருடன்தான் சினேகிதம் பாராட்டினான் கண்டியளோ.
பாவங்கள் தானே..அதுகளின்ட கதைகளை இப்ப கேட்க ஒருத்தரும்; இருக்காயினம், ஏலாத நேரத்தில தங்கட வாலிப வயசுக்கால விளையாட்டுக்களை கதைச்சு ஆனந்தப்படுறத்துக்கு அவையளுக்கு ஒரு ஆள்தேவைப்படும் என்ட சைக்கோலொஜியை நான் நல்லாய் அறிஞ்சுவைத்திருந்தனான்.
கதைக்கத்தொடங்கினா பல கதைகள் வரும். கொஞ்சம் சுருதியும் ஏத்திப்போட்டு வாயில சுருட்டும்வேற வைச்சினமோ! ரைம்மிசின் கிறு கிறு என்று முன்னால ஓடி 48, 50களுக்கு போய்விடும். கடைசில கதைகேட்க தேவையில்லாம கூப்பிட்டு, இருத்தி அவ்வளவு நேரம் கதைகேட்ட நானே தூசனத்தால பேச்சும் கேட்கவேண்டிய நிலைமைகளும் கனக்க நடந்தது கண்டியளோ.
புலனாய்வுத்துறை என்ன புலனர்வுத்துறை, ஆராரார், எந்த எந்த வீட்டிற்கு போயினம் வரியினம், எந்த பெடிப்பிள்ளை, ஆர்ட பெடிச்சிக்கு ரூட் விடுறார் என்பதெல்லாம் அப்புமாருக்கு அத்துபடி கண்டியளோ.

நானும் என்ன சும்மாவே..கனக்க விசியங்களை இதுகளிடமிருந்துதான் அறிஞ்சுகொள்ளுறனான். நான் எழும்பி போகவிட்டி என்னைப்பெத்தியும் நடக்கும் கச்சேரி என்று எனக்கும் தெரியும்தான். இப்படி அப்பப்ப உவையோட இருந்து அவை சொன்னகதைகளில் பழைய காலத்தில் ஊரில நடந்த சில சுவாரகசியமான விடயங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்கின்றேன்.

1967 இல இந்தியாவில இருந்து யாரோ ஒரு சாமியார் வந்திருந்தாராம். அந்த நேரமே அவரிட்ட பொம்பிளைகள்தான் கூடப்போவினமாம். அவரிட்ட ஒருக்கா போய் அவர்ட கையால திருநூறு பூசினா அந்த நாளில் ஏதாவது எதிர்பாராத நன்மை கிடைக்குமாம். இப்படி கொஞ்சம் யாழ்ப்பாணம், வன்னி பக்கம் கொஞ்சம் பேமஸ் ஆயிட்டாராம் சாமி. பிறகு இருந்தாப்போல முறுகண்டி பிள்ளையார் கோவில்ல இருந்து யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோவில்வரை தான் பிரதட்டை பண்ணிக்கொண்டே (உருண்டபடியே) வரப்போறன் என்று அறிவிச்சு அமளிதுமளியா சனங்கள் எல்லாம் வழி நீளத்திற்கு தண்ணீர் தெளித்து, நிலப்பாவடை விரிச்சு,Nவை செய்ததுகளாம். சொன்னமாதிரியே நல்லூரடிக்கும் உருண்டுகொண்டே வந்தும் சேர்ந்தாராம். என்ன?? சேர்ந்த உடனேயே இந்தியாவில இருந்து வந்த பொலிசுக்காறங்கள் இவரை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு போட்டாங்களாம். சாமியார் இந்தியாவிலயும் கனக்க மங்கைகளுடன் திருவிளையாடலாம். அங்க திரத்த ஆள் இங்க ஓடிவந்திருக்கிறார். அது சரி நித்தியானந்தாக்கள் என்ன அவர்ட தாத்தாக்களும் அப்ப இருந்திருக்கினம் பாத்தியளே?

கோப்பாய் நீர்வேலிப்பகம் உள்ள வீடு ஒன்றாம். இது நடந்தது கிட்டத்தட்ட 1917,1918 அப்படி இருக்குமாம். அங்க அப்பு தோட்டங்கள்தானே கனக்க. அப்ப தோட்டத்திற்கு ஒதுக்குப்புறமாய் ஒரு பழைய வீடு இருந்ததாம். அங்க ஒருவரும் எட்டிக்கூடப் பார்க்கிறதில்லையாம். ஏனெண்டு கேட்டால் ராத்திரி நேரம் அங்க போனா.. பெரிய சத்தமாய் “போடவா..போடவா” என்றபடியே கேட்டுக்கொண்டிருக்குமாம். அப்ப அந்த இடத்தில கதிரவேலர் என்ட ஒரு வெறிக்குட்டியர் இருந்தவராம். ஒருநாள் வெறியில தன்ட குடிசைக்குப்போக மனுசிக்காரி அடிச்சு திரத்த, படுக்க இடமில்லாம கதிரவேலர் போய், இந்த தோட்ட வீட்டில படுத்திருக்கிறார். அப்ப நல்லா தூக்கத்தில அயருற நேரம் பார்த்து “போடவா…போடவா” என்று கேட்டிச்சாம், இந்தாள் சீ என்ன இதப்பா என்றுபோட்டு திரும்ப படுத்து அயருற நேரம் “போடவா…போடவா” என்று கேட்க..கதிரவேலர் எவன்டா அவன் என்று தூசனத்தால கேட்க! “போடவா…போடவா” என்று திரும்பவும் கேட்டதாம் “போட்டுத்துலையன் சனியனே நித்திரையை குழப்பிக்கொண்டிருக்கிறாய்” என்று கதிரவேலு சொன்னதும் கூரையை பிச்சுக்கொண்டு, தங்க கட்டிகள், நகைகள், காசுகள் என்று விழுந்திச்சாம். பிறகு கதிரவேலர் பமிலிதானாம் அந்த ஊரில் ரோயல் பமிலியாப்போச்சாம்.
நானும் மல்லாக்க படுத்துக்கொண்டு எத்தனை தரம் விட்டத்தை பார்த்திருப்பன்!

அடுத்தது அவையில கனக்க பேர், அந்த நாட்களில அம்பலவாணர்ட மிருதங்கத்திற்கும், தட்சணாமூர்த்தியிட தவிலுக்கும் பரம ரசிகர்கள். அப்ப எங்க கச்சேரி எண்டாலும் வார்ப்புகளை எல்லாம் வாத்துக்கொண்டு சீக்கிரம் போய்டுவினமாம் கச்சேரி பார்க்க. பிறகு திரும்பி வீட்டுக்கு வர நடுச்சாமம் கழிஞ்சுபோடுமாம். அப்படி அவை வரேக்க, பலவேளைகளில சுடலை கடக்கவேண்டி வருமாம், அப்படி வரும்போது……………………………

என்ன நானும் சொல்ல சொல்ல நல்லாக் கேட்டுக்கொண்டிருப்பியள் என்ன? உண்மையில உங்களுக்கு பழசுகளின்ட கதை வேணும் எண்டால், பிடிச்சிருந்தால், வாசித்துப்போட்டு போகாமல் நல்லா கொமன்ஸ் பண்ணுங்கோ..
பழசுகள் சொன்ன சுடலைக்கதைகள் தொடரும்…

7 comments:

சயந்தன் said...

"போடவா - போடவா????"

Unknown said...

என்ன பேய்க்கதை சொல்லி வெருட்ருரீங்க டிலான்

Jana said...

அடடடா...அடுத்தடுத்து பதிவா? வாழ்த்துக்கள். பக்கத்தில் இருந்து கதை சொல்வதுபோலவே கொண்டுபோகின்றீர்களே டிலான். அந்த மாதிரி.

Unknown said...

I am very Expecting for the SUDALAI Stories. Nice

Unknown said...

Neenka sonna vidayankalai appavidam keeddu partheen. nadanthathuthaan.
ENTHA THAATHAA\\ intha kathai sonnavar ennru keeddaar.

valliamman said...

மிக அருமையான கதைகள்.
இன்னும் சொல்லுங்கோவன்.

valliamman said...

மிக அருமையான கதைகள்.
இன்னும் சொல்லுங்கோவன்.